search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி நிர்வாகிகள்"

    பெரியகுளம் அருகே தமிழக அரசு வழங்கிய 2 ஏக்கர் நிலத்தை அபகரித்த கல்லூரி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள குள்ளப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணி மனைவி அமராவதி (வயது52).

    இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் நிலமற்ற ஏழை விவசாயிளுக்கு வழங்கப்படும் 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து சிலர் அபகரித்து விட்டனர்.

    இது குறித்து பெரியகுளம் டி.எஸ்.பி.யிடம் அமராவதி புகார் அளித்தார்.

    அவரது உத்தரவின்பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில் விவசாய கல்லூரி நிர்வாகி பலராமன், அவரது மகன்கள் விஜயகுமார், விக்ரம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #taimilnews
    ×